பலத்த மழையால் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பைல் படம்
பலத்த மழையால் சதுரகிரிமலையில் நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்படும்.
நாளை 3ம் தேதி (வெள்ளிக்கிழமை), தை மாத வளர்பிறை பிதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை 3ம் தேதி முதல் வரும் 6ம் தேதி (திங்கள் கிழமை) வரையிலான 4 நாட்களும் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலையில் இருந்து பரவலாக சாரல்மழை பெய்து வருகிறது. நாளையும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை காலை நேரத்தில் மலைப் பகுதிகளில் மழை பெய்தால், சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நாளை சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சதுரகிரி மலை கோவிலுக்கு நானை மற்றும நாளை மறுநாள் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu