சிவகாசியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள்

சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற போட்டிகளை கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜெகநாதன் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தடை ஓட்டம், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறியும் போட்டிகள் நடபெற்றன.
மாணவிகளுக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளின் தனி நபர் பிரிவில் சிவகாசி இந்து நாடார் உறவின்முறை பள்ளி மாணவர் கார்த்திக் சாம்பியன் பட்டத்தையும், மாணவிகள் பிரிவில் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலினி சாம்பியன் பட்டத்தையும் வென்றனர். போட்டிக்கா ஏற்பாடுகளை, கல்லூரியின் உடற்கல்வித்துறை தலைவர் ஜான்சன், பேராசிரியர் சுரேஷ்பாபு மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu