/* */

சிவகாசியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைப்பிடிப்பு

சிவகாசியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

HIGHLIGHTS

சிவகாசியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறைப்பிடிப்பு
X

பைல் படம்

சிவகாசியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல இடங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் திடீரென்று மோதி விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.

கடந்த வாரம் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர், சாலையில் திரிந்த மாடு மீது மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துகளை தடுக்கும் வகையில், சாலைகளில் திரியும் மாடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து நேற்றிரவு, சிவகாசி தாசில்தார் லோகநாதன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சிவகாசி, சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், காரனேசன் காலனி பகுதியில் திடீர் ஆய்வு செய்து சாலைகளில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை பிடித்தனர். பிடிபட்ட மாடுகளை திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு, சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Updated On: 19 May 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  2. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  3. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  5. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  6. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  7. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  8. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  9. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  10. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!