சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி மலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
X

சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

சதுரகிரிமலையில் ஆவணிமாத பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் இன்று ஆவணி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்து பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். கோவில் அடிவாரப்பகுதியான தாணிப்பாறை நுழைவுப் பாதை கேட் முன்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே காத்திருந்தனர். 6 மணி முதல் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பௌர்ணமி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமாக மதியம் 12 மணி வரை மட்டுமே மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கும். கூட்டம் அதிகமாக இருப்பதால் மதியம் ஒரு மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக வனத்துறை ஊழியர்கள் கூறினர். பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமியை, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story