/* */

ராஜபாளையத்தில் இளம் பெண் காணவில்லை: தந்தை புகார்

தாத்தா வீட்டில் சில நாட்கள் இருந்த தனலட்சுமி திடீரென்று அங்கிருந்து காணாமல் போனதாக அவரது தந்தை புகார் அளித்தார்

HIGHLIGHTS

ராஜபாளையத்தில்  இளம் பெண் காணவில்லை: தந்தை புகார்
X

பைல் படம்

ராஜபாளையத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மகளை காணவில்லை என தந்தை புகார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்த சண்முகநாதன், மகள் தனலட்சுமியின் பாதுகாப்பு கருதி ராஜபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

தாத்தா வீட்டில் சில நாட்கள் இருந்த தனலட்சுமி திடீரென்று அங்கிருந்து காணாமல் போனார். மகள் காணாமல் போன தகவலறிந்த சண்முகநாதன், அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவர் ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார். சண்முகநாதன் புகாரில், தனது மகளை கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!