/* */

சாலை விபத்தில் இறந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி

2009 ம் ஆண்டு முத்துமுனீஸ்வரியுடன் பணிக்குச் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து ரூ,26 லட்சம் நிதி உதவி அளித்தனர்

HIGHLIGHTS

சாலை விபத்தில் இறந்த பெண் காவலரின் குடும்பத்துக்கு சக காவலர்கள் நிதியுதவி
X

சாலை விபத்தில் பலியான பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்களின் சார்பில்  ரூ. 26 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முத்துமுனீஸ்வரி (34). இவர் சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, முத்துமுனீஸ்வரி தனது இருசக்கர வாகனத்தில் காவல்நிலையம் செல்லும் போது நேரிட்ட சாலை விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில், முத்துமுனீஸ்வரி பணிக்குச் சேர்ந்த 2009ம் ஆண்டு, அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் ஒன்று சேர்ந்து, முத்துமுனீஸ்வரியின் குடும்பத்திற்கு நிதி உதவி செய்துள்ளனர். காவலர்கள் நிதியாக திரட்டிய 26 லட்சம் ரூபாயை, முத்துமுனீஸ்வரியின் மகன்கள் சக்திவேல் பாண்டியன் (7), சிவசக்தி பாண்டியன் (5) இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாயை எல்ஐசியிலும், தலா 3 லட்சம் ரூபாயை தபால் நிலைய கிஸான் விகாஸ் பத்திரத்தில் முதலீடு செய்து வழங்கினர். மேலும், முத்துமுனீஸ்வரியின் கணவர் பார்த்தசாரதியிடம் 42 ஆயிரம் ரூபாய் பணத்தையும், காவலர்கள் வழங்கினர். உதவி செய்த காவலர்களுக்கு உயிரிழந்த காவலர் முத்துமுனீஸ்வரியின் குடும்பத்தினர் நன்றி கூறினர்.

Updated On: 3 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு