/* */

தீப்பிடித்து எரிந்த பேட்டரி வாகனம்: நடுரோட்டில் நடந்த சம்பவம்

சிவகாசியில் சாலையில் சென்ற, இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

தீப்பிடித்து எரிந்த பேட்டரி வாகனம்: நடுரோட்டில் நடந்த சம்பவம்
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன் (40). வியாபாரியான கண்ணன், தனது இருசக்கர பேட்டரி வாகனத்தில் சென்றபோது வாகனம் பழுதாகி நின்றது. உடனடியாக வாகனத்தை சரி செய்வதற்காக மெக்கானிக் ஒருவரை கண்ணன் அழைத்துள்ளார். இருசக்கர வாகன மெக்கானிக், பழுதாகி நின்ற வாகனத்தை சரி செய்து சிவகாசி - சாத்தூர் சாலையில் இயக்கி பார்த்துள்ளார்.

வண்டி ஓடியபோது திடீரென்று கரும்புகை வந்துள்ளது. இதனால் மெக்கானிக், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு புகை வருவதை தடுக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென்று இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரியத்துவங்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது. சாலையில் சென்று கொண்டிருந்த பேட்டரி வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 23 May 2022 3:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...