/* */

சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

பட்டாசு கடைக்கு அருகில் தகர செட் அமைத்து பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
X

சிவகாசி அருகே பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக, பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் சிவகாசி - சாத்தூர் சாலை பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

சிவகாமிபுரம் பகுதியில் திரவியராஜ் (37) என்பவர், தனக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகில் தகர செட் அமைத்து பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முத்தமிழ்புரம் காலனியைச் சேர்ந்த அருணாச்சலம் (32) என்பவர், அதே பகுதியில் உள்ள பட்டாசு கடைக்கு அருகே கூரை செட் அமைத்து பட்டாசுகளை பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த திரவியராஜ் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரும் பதுக்கி வைத்திருந்த 20 பெட்டி பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 May 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்