திருச்சுழியில் நாய் கடித்து புள்ளிமான் சாவு

திருச்சுழியில் நாய் கடித்து புள்ளிமான் சாவு
X
திருச்சுழி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுனிதா தலைமையில் மருத்துவக்குழு சிகிச்சை அளித்தனர்

திருச்சுழியில் நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழந்தது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில், காப்பு காட்டில் இருந்து வழி தவறிய புள்ளி மான் ஒன்று நுழைந்தது. அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை விரட்டி கடித்தன. அங்கிருந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி, புள்ளி மானை பத்திரமாக மீட்டனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாய்கள் கடித்ததில் மிகவும் மோசமாக காயமடைந்திருந்த புள்ளி மானை திருச்சுழி கால்நடை மருத்துவமனை மருத்துவர் சுனிதா தலைமையில் மருத்துவக்குழு சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் புள்ளி மான் உயிரிழந்தது. வனத்துறை ஊழியர்கள் புள்ளி மான் உடலை, உடற்கூராய்வு செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர்.


Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?