/* */

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரங்கோலி போட்டி

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரங்கோலி போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரங்கோலி போட்டி
X

ரங்கோலிப் போட்டியில் கலந்துகொண்ட பெண்கள்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியன் அலுவலகத்தில், சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது.

மகளிர் சுயஉதவி குழுவைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டிகளை யூனியன் தலைவர் முத்துலட்சுமி, துணை தலைவர் விவேகன்ராஜ் துவக்கி வைத்தனர். யூனியன் அலுவலக வளாகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை வரைந்தனர். இதனை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

சிறந்த ரங்கோலி வரைந்த குழுவினருக்கு யூனியன் தலைவர் முத்துலட்சுமி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 23 July 2022 4:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்