/* */

சிவகாசியில் இருந்து தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்கள்

மாவட்டத்தில் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.

HIGHLIGHTS

சிவகாசியில்  இருந்து தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்கள்
X

சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட தனியார் பேருந்துகள்

சிவகாசியில், பொது வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் இயங்காத நிலையில் தொலைதூரங்களுக்கு தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன.

வேலைக்கு செல்பவர்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என தனியார் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிவகாசி பகுதியில் காலையில் இயங்கிய அரசு பேருந்துகளும், நண்பகலில் ஓட்டுனர், நடத்துனர் இல்லாததால் நிறுத்தப்பட்டன.குறிப்பாக கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்காத நிலையே இருந்தது. இதனால் தனியார் மினி பேருந்துகள் திருவேங்கடம், தாயில்பட்டி, சாத்தூர், விருதுநகர் உள்ளிட்ட தொலை தூரங்களுக்கும் இயக்கப்பட்டது. அரசு பேருந்துகள் இல்லாத நிலையில் பயணிகளும் மினி பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர். மாலை நேரத்தில் பணிமுடித்து செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் வீடுகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On: 29 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’