Begin typing your search above and press return to search.
சிவகாசியில் பத்ரகாளியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா
ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளினார்
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் வந்து கடைக்கோவிலில் எழுந்தருளினார். பின்னர் இரவு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'காமதேனு' வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பத்திரகாளியம்மன் கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.