/* */

சிவகாசி அருகே மின்னல் தாக்கி, பட்டாசு ஆலை கிட்டங்கி இடிந்து தரைமட்டம்..!

Sivakasi News Today -சிவகாசி அருகே மின்னல் தாக்கி, பட்டாசு ஆலை கிட்டங்கி இடிந்து தரைமட்டம் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே மின்னல் தாக்கி, பட்டாசு ஆலை கிட்டங்கி இடிந்து தரைமட்டம்..!
X

சிவகாசி அருகே மின்னல் தாக்கியதில், இடிந்து தரைமட்டம் ஆன பட்டாசு ஆலை கிட்டங்கி.

Sivakasi News Today -விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.இந்நிலையில், சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பேராபட்டி பகுதியிலும் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இந்தப் பகுதியில் நாகூர்கனி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டதால், ஆலை உரிமத்தின் பெயர் மாற்றுவதற்காக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த பட்டாசு ஆலையின் பட்டாசுகள் இருப்பு வைக்கும் குடோனை மின்னல் தாக்கியது. இதனால் அந்த குடோன் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இதில் குடோனில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு ஆலை இயங்காத நிலையில், அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Jun 2022 11:51 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!