/* */

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
X

சிவகாசி அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, பராசக்தி மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 56ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை மீன் வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் கலந்து கொள்ள 360 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு சுற்றிலும் 40 காளைகளும், 25 வீரர்களும் களத்தில் இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. சிறந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரருக்கு இரு சக்கர வாகனம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு பள்ளபட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 30 May 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை