/* */

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

HIGHLIGHTS

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மாவட்டத்தில், மழை இல்லாமல் வறண்ட சூழ்நிலை இருந்து வந்தது. இன்று காலையில் இருந்து கோடை வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென்று மேகங்கள் திரண்டுவந்து பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சிவகாசி புறநகர் பகுதிகள், மீனம்பட்டி, பாறைப்பட்டி, சின்னக்காமன்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 16 April 2022 2:01 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!