/* */

பட்டாசு தயாரிப்பு தொடர்பாக 4 பேர் கைது

சாத்தூர் அருகே, வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

பட்டாசு தயாரிப்பு தொடர்பாக 4 பேர் கைது
X

சாத்தூர் அருகே, வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில், வீடுகளில் வைத்து சட்ட விரோதமாக சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் வெற்றிமுருகன், ஜவஹர், வேல்சாமி தலைமையில் போலீசார் தாயில்பட்டி, வெற்றிலையூரணி, மேலஒட்டம்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெற்றிலையூரணி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (64), மேலஒட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (41), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (53), தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) ஆகிய 4 பேரும் சட்ட விரோதமாக, வீட்டில் வைத்து சரவெடி மற்றும் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 20 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  2. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  6. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  7. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  8. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  9. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  10. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!