இந்து கோயில்களில் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார், மாநிலத்தலைவர் காடேஸ்வரசுப்பிரமணியன்
இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. வட மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் சில பயங்கரவாதிகள் உள்ளனர். இங்கும் கலவரத்தை தூண்ட முயற்சிகள் செய்கின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்து அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்.
திருவில்லிபுத்தூரில் புகழ்மிக்க ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற இருக்கின்றது. தேரோட்டத்திற்கு முன்னதாக தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அந்த நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் அபகரித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் முழுமையாக மீட்கப்பட வேண்டும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu