விருதுநகர் அருகே வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகரில் வேனில் கடத்திச்சென்ற ஆயிரத்து 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
விருதுநகரில், வேனில் கடத்திச்சென்ற ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை விருதுநகர் - வடமலைக்குறிச்சி சாலையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். வேனுக்குள் ஆயிரத்து, 500 கிலோ ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரேசன் அரிசி மூடைகள் கடத்தி வந்த விருதுநகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல் ரேசன் அரிசி மூடைகளை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu