சிவகாசி அருகே கார்கள் மோதி விபத்து: மூதாட்டி காயம்

சிவகாசி அருகே கார்கள் மோதி விபத்து:  மூதாட்டி காயம்
X

நேருக்கு நேர் மொதிக்கொண்ட கார்கள்.

சிவகாசி அருகே ரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (50). இவர் தனது மனைவி பவானி, தாயார் விசாலாட்சி (68), மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் சிவகாசி - முதலிபட்டி அருகேயுள்ள பெத்தலுபட்டி பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

கோவிலுக்கு சென்றுவிட்டு முதுகுளத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, திருத்தங்கல்லில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே சென்னையில் இருந்து சிவகாசிக்கு வந்து கொண்டிருந்த கார், ஜெகநாதன் வந்த கார் மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மூதாட்டி விசாலாட்சி லேசான காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture