விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் முகாம்
X

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையில், ஆதார் எண்ணை இணைக்கgம் சிறப்பு முகாம் செப்.4 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது

விருதுநகர் மாவட்டத்தில் நாளை வாக்காளர் அட்டையில், ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டத்தில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை 4ம் தேதி (ஞாயிற்றுகிழமை) நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடந்து வருகிறது. வாக்காளர்களே நேரிடையாக இணையதளங்கள் மூலமாக தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் 934 வாக்குச் சாவடி மையங்களில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business