/* */

ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு

விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்

HIGHLIGHTS

ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பு
X

ராஜபாளையம் அருகே விவசாயி வீட்டில் புகுந்த நல்லபாம்பு

ராஜபாளையம் அருகே, விவசாயி வீட்டில் பதுங்கியிருந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள, வேட்டைபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் நெல் விவசாயம் செய்து வந்த பாலசுப்பிரமணியன், அறுவடையான நெல் மணிகளை பிளாஸ்டிக் ட்ரம்களில் போட்டு வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியனின் மனைவி ஜோதி (35), வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்பில் இருந்து, கயிறு போன்று நீளமாக ஒன்று அசைவதைப் பார்த்து பயந்து போனார். உடனடியாக இது குறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நெல்மணிகள் போட்டு வைத்திருந்த ட்ரம்மின் மூடியை திறந்தனர். அதில் சுமார் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று இருந்ததை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியின் மூலம், நெல் மணியில் பதுங்கியிருந்த நல்லபாம்பை உயிருடன் மீட்டு, மேற்கு தொடர்ச்சிமலை காட்டுப் பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Updated On: 25 Jan 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்