/* */

திமுக ஆட்சியில் நிறைய தவறுகள் நடைபெறுகிறது: முன்னாள் அமைச்சர்

மக்களின் நிலையை தற்போதைய திமுக அரசு கவனிக்கத் தவறினால், வரும் மக்களவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.

HIGHLIGHTS

திமுக ஆட்சியில் நிறைய தவறுகள் நடைபெறுகிறது: முன்னாள் அமைச்சர்
X

சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51வது பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர் தமிழக மக்களுக்கு நன்மைகள் செய்திடும் நோக்கத்தில், அவர் இதயதெய்வமாக வணங்கிய பேரறிஞர் அண்ணாவின் பெயரில் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். இந்த கட்சி துவங்கிய காலத்திலிருந்து பல்வேறு சோதனைகளை கடந்து வந்து, மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு பின்பு புரட்சி தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நலத் திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி தமிழகத்தை தலை நிமிரச்செய்தார். அதிமுக கட்சியின் வெற்றியை, பொய்யான வாக்குறுதிகள் வழங்கி திமுக கட்சி தட்டிப்பறித்துள்ளது. திமுக ஆட்சி செய்யும் காலங்களில் எல்லாம் வன்முறை வெடிப்பது இப்போதும் தொடர்கிறது. தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை திமுக ஆட்சியில் தொடர் கதையாக உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கான எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. மேலும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. திமுக கட்சிக்கு வாக்களித்த பொதுமக்கள், திமுக கட்சிக்கு வாக்களித்ததை எண்ணி எண்ணி வருத்தப்படுகின்றனர்.

சாமானிய மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. தமிழக அரசு டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே, இலக்கு நிர்ணயித்து வேகமாக செய்து வருகிறது. தொழில்துறைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கெனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கு, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்

மக்களின் நிலையை தற்போதைய திமுக அரசு கவனிக்கத் தவறினால், வரும் மக்களவை தேர்தலில் திமுக படுதோல்வி அடையும். மக்கள் திமுக கட்சிக்கு சரியான பாடத்தை பரிசாக தருவார்கள். அதிமுக கட்சியை யாராலும் அசைக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஏனென்றால் இது தொண்டர்களால் உருவான பேரியக்கம் என்று ராஜேந்திரபாலாஜி பேசினார். கூட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Oct 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  2. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  3. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  4. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...
  5. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  7. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  9. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  10. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...