/* */

சிவகாசி அருகே வீட்டை இடிக்கும் போது வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

வீட்டை இடிக்கும் பணியில் தாலிகொளுந்துபட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் உட்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்

HIGHLIGHTS

சிவகாசி அருகே வீட்டை இடிக்கும் போது   வீடு   இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
X

 சிவகாசி அருகேயுள்ள கொத்தநேரி பகுதியில்  இடிந்து விழுந்த தொகுப்பு வீடு

சிவகாசி அருகே பழைய வீட்டை இடிக்கும் எதிர்பாராத விதமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கொத்தநேரி பகுதியில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கருப்பையா என்பவர் வசித்து வந்த வீடு மிகவும் சேதமடைந்து இருந்தது. எனவே வீட்டை இடித்துவிட்டு பராமரிப்பு பணிகள் செய்ய முடிவெடுத்து பணிகள் நடந்து வந்தது. வீட்டை இடிக்கும் பணியில் தாலிகொளுந்துபட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (23) உட்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் அஜித்குமார் சிக்கி கொண்டார். மற்ற அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று இடிபாடிகளில் சிக்கி படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அஜித்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எம்.புதுப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 April 2022 1:00 PM GMT

Related News