/* */

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தாெடர் காேடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

கடந்த 5 நாட்களாக, மேலடுக்கு சுழற்சி காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வழக்கமான கோடை வெயில் கடுமையாக இருந்துவந்த நிலையில் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல்மழை பெய்தது.

திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், தளவாய்புரம், சேத்தூர், மல்லி, கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் கோடை கால புழுக்கம், இறுக்கம் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தற்போது பெய்துவரும் மழை, கோடைகால விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Updated On: 13 April 2022 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!