சிவகாசியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நிர்வாகி மணிமாலா பாண்டியன் தலைமை வகித்தார். இதில் அவர் பேசும்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, அவர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் குருவையா, இளங்கோ, வேல்முருகன், சிவக்குமார், கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். குமார் நன்றி தெரிவித்து பேசினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!