/* */

சிவகாசியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சிவகாசியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க நிர்வாகி மணிமாலா பாண்டியன் தலைமை வகித்தார். இதில் அவர் பேசும்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும். நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, அவர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் குருவையா, இளங்கோ, வேல்முருகன், சிவக்குமார், கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். குமார் நன்றி தெரிவித்து பேசினார்.

Updated On: 22 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி