/* */

விருதுநகர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் : ஆட்சியர் துவக்கம்

கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில்  கொடி  நாள் வசூல் : ஆட்சியர் துவக்கம்
X

பைல் படம்

விருதுநகர் மாவட்டத்தில் கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 2022ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி நன்கொடை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் மேகநாதரெட்டி பேசியதாவது: இந்திய திருநாட்டில் முப்படைகளில் பணிபுரிந்து தேச நலனுக்காக உயிர் நீத்த, காயமடைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் 7ம் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கொடிநாள் வசூலாக திரட்டப்படும் நிதி போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு நல நிதியாகவும், போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவி செய்திடவும் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொடி நாள் நிதி திரட்டும் இலக்காக 95 லட்சத்து, 61 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்பினால் 1 கோடியே, 20 லட்சம் ரூபாய் நிதியாக திரட்டப்பட்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கொடிநாள் நிதியாக 1 கோடியே 10 ஆயிரம் ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, நன்கொடைகளை தாராளமாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் எட்வர்ட்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2022 3:50 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...