/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
X

கோப்பு படம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன். இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில், புஸ்வானம் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய சீவுதூள் அரைக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த சீவுதூள் தீப்பற்றி எரிந்தது.

விபத்து ஏற்பட்டவுடன் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு பத்திரமாக வெளியேறினர். விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 May 2022 1:14 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...