சிவகாசி நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணி முகாம்
Cleaning Camp at Sivakasi Municipal Office
HIGHLIGHTS
சிவகாசி பேருந்து நிலையத்தில், மேயர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி சார்பாக, தூய்மை இந்தியா இயக்கம் 2.O என்றம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தலைமையில், தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி பகுதிகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூய்மையாக உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் அமைப்பினர், மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பேருந்து நிலையப் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் வலியுறுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், ஊழியர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.