அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

காரியாபாட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை தொடக்கி வைத்து அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபாட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளை தொடக்கி வைத்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் சமுதாய சொத்துக்களை உருவாக்கவும், பராமரிக்கவும், அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குமான தேவைகள் அதிகமாகவே உள்ளன.
1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், கிராம ஊராட்சிக்கென குறிப்பிட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஊராட்சிகளால் நிறைவேற்றப்பட வேண்டிய குறிப்பிட்ட பொருட்களை நடைமுறையில் உள்ள திட்டங்கள் மூலம் நிறைவேற்ற முடிவதில்லை. மேலும், பெரும்பாலான உள்ளாட்சி நிறுவனங்கள் அவற்றின் தேவைகளை நிறைவு செய்ய போதிய சொந்த நிதி ஆதாரங்கள் இல்லாததால் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீடுகளை எதிர்நோக்கியே உள்ளன.
தற்போது உள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு அவற்றின் வழிகாட்டி நெறிமுறைகள் எளிமையானதாக இருக்கவும், உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களின் விருப்ப பணிகளை எடுத்துச் செய்யும் வகையிலும், கிராம வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமாக தேவைப்படும் மத்திய அரசு திட்டங்களின் கீழ் எடுத்துச் செல்ல இயலாத அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக உள்ள புதிய திட்டமே "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்" ஆகும்.
இத்திட்டம் குக்கிராம அளவில் உட்கட்டமைப்புகளுக்கான இடைவெளிகளை நிறைவு செய்வதை உறுதி செய்யும் நோக்கில் 2021-22-ம் ஆண்டில் ரூ1200 கோடி ஒதுக்கீட்டில் தமிழக முதல்வரால் மீண்டும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டபணிகளை , அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கிவைத்து ஆய்வு செய்தனர். எம்.பி. நவாஸ்கனி, ஆட்சியர் மேகநாதரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu