விருதுநகரில் நாளை அரசு பணியாளர் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்

விருதுநகரில்  நாளை அரசு பணியாளர் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஆட்சியர்
X

பைல் படம்

தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் மற்றும் கால்குலேட்டர் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது

விருதுநகரில் இன்று குரூப் 7பி தேர்வு, நாளை குரூப் 8 தேர்வுகள், 8 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்வுகள் குறித்து முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில், இன்று குரூப் 7பி தேர்வு 3 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வை 2 ஆயிரத்து 620 பேர் எழுதுகின்றனர். அதே போல நாளை 11ம் தேதி (ஞாயிறு கிழமை) குரூப் 8 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 8 தேர்வுக்காக 5 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளை, குரூப் 8 தேர்வை 3 ஆயிரத்து 440 பேர் எழுத உள்ளனர்.

குரூப் 7பி தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், 10 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே போல குரூப் 8 தேர்வு நடைபெற உள்ள 5 மையங்களில்12 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 2 கண்காணிப்பாளர் அலுவலர்கள், 13 வீடியோகிராபர்களும் பணியில் இருப்பார்கள். மேலும் தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் மற்றும் கால்குலேட்டர் கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது. தேர்வு கண்காணிப்பாளர்களும் செல்போன்கள் வைத்திருக்கக் கூடாது என்று ஆட்சியர் கூறினார். ஆட்சியருடன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) முத்துக்கழுவன் உட்பட அதிகாரிகள் இருந்தனர்.

Tags

Next Story