/* */

சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை

Murder Case- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை
X

கொலை செய்யப்பட்ட லாரி தரகர் பவானிகுமார்

Murder Case- சாத்தூர் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சின்னகொல்லபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பவானிகுமார் (46). இவர் சாத்தூரில் லாரி தரகராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த செல்வம் (48) என்பவரும் நீண்ட நாள் நண்பர்கள். இந்த நிலையில் அமீர்பாளையம், முனியசாமி கோவில் அருகே பவானிகுமார் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பவானிகுமார் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் பவானிகுமாரும், செல்வமும் மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் செல்வம், பவானிகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வந்தனர். சாத்தூர் வைப்பாற்று பகுதியில் மறைந்திருந்த செல்வத்தை, போலீசார் கைது செய்தனர். தொழில் போட்டி தகராறில் கொலை நடந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட செல்வத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது