/* */

திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு சிறை

திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து சார்பு ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞருக்கு சிறை
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர், மடத்துப்பட்டி தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (26). இவர் கடந்த 2022ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் தர்மராஜன், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த வெங்கடேஷனை நிறுத்தி அவருக்கு அபராதம் விதித்தார். அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வெங்கடேஷ், சார்பு ஆய்வாளர் தர்மராஜனை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்து சார்பு ஆய்வாளர் தர்மராஜன், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, சார்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளி வெங்கடேசனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 1 Jun 2023 7:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’