/* */

இராஜபாளையம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

இராஜபாளையம் அருகே சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்
X

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் 42-வது வார்டு பகுதி மக்கள் முறையாக தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் 42-வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஏழை, எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாததால் தங்களால் விலை கொடுத்து குடிநீர் வாங்க முடியாது எனவும், மெத்தனமாக செயல்படும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 5 Feb 2022 12:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  3. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  4. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  5. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?