/* */

ராஜபாளையத்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்: வேன் டிரைவர் கைது

ராஜபாளையம் அருகே, கடத்தப்பட்ட 21 ரேசன் அரிசி மூடைகள் பறிமுதல்.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டை பறிமுதல்: வேன் டிரைவர் கைது
X

ராஜபாளையம் அருகே பிடிபட்ட  அரிசி மூட்டைகள்


விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் அருகேயுள்ள ஆலங்குளம் பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குளம் - ராஜபாளையம் சாலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் ஓட்டிவந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வண்டியில் 50 கிலோ எடையிலான 21 மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூடைகள், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு அரிசி அரவை ஆலைக்கு கொண்டு செல்வதாக தெரிந்தது. ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் ஜெயபாலை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 21 ரேசன் அரிசி மூடைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 Jan 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...