/* */

அருப்புக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அருப்புக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாமகவினர் ஆர்ப்பாட்டம்
X

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அருப்புக்கோட்டை நர்சிங் கல்லூரி மாணவியிடம், செல்போன் வீடியோவில் ஆபாசமாக பேசிய கல்லூரி தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுப்பதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளுக்கு துணையாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும், ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணம் இழப்பதையும், உயிர் இழப்பதையும் தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று திலகபாமா பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல்சாமி, மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Jun 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!