/* */

இராசபாளையத்தில் பலத்த மழையால் வீடு இடிந்தது; இருவர் உயிர் தப்பினர்

இராசபாளையத்தில் பலத்த மழையால் வீடு இடிந்தது; இதில், இருவர் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

இராசபாளையத்தில் பலத்த மழையால்  வீடு இடிந்தது; இருவர் உயிர் தப்பினர்
X

இராஜபாளையத்தில் மழையின் காரணமாக குமரன் தெருவில் வீடு இடிந்து சேதம்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் குமரன் தெரு மாடசாமி கோவில் பகுதி அருகே, கோவிந்தசாமி வயது 65. இவரது மனைவி சுப்பு 58. சிறிய மண் வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நள்ளிரவில் பெய்த கனமழையின் காரணமாக, வீட்டுச் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருந்து உள்ளது. இருப்பினும், சிறிய கம்புகளை வைத்து முட்டுக் கொடுத்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் பெய்த மழையில், வீடு இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி இருவரும் உயிர் தப்பியுள்ளனர். தகவல் அறிந்து வட்டாட்சியர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்