/* */

பாதுகாப்பு தீபாவளி: ராஜபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுவது பற்றி, ராஜபாளையத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பாதுகாப்பு தீபாவளி: ராஜபாளையத்தில்  போலீசார் விழிப்புணர்வு
X

விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்து, ராஜபாளையம் பகுதியில், தீயணைப்புத்துறை சார்பில்  கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தீயணைப்புத்துறை சார்பில், விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தை, தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன், உதவி மாவட்ட அலுவலர் மணிகண்டன் துவக்கி வைத்தனர். ஊர்வலத்தில் ராஜூக்கள் கல்லூரியின் என்.எஸ்.எஸ் மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பாதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து, சங்கரன்கோவில் முக்கோணம் சாலை வரை, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய வீரர்களும் கலந்து கொண்டு, விபத்துகளை தவிர்க்கும் முறைகள் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

Updated On: 3 Nov 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்