/* */

கையெடுத்து கும்பிட்டு போலீசார் கொரோனா விழிப்புணர்வு

கையெடுத்து கும்பிட்டு போலீசார் கொரோனா விழிப்புணர்வு
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்து பயணிகளிடம் கொரோனோ குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனோ பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் போலீசார் தொடர்ந்து கொரோனா குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளும் அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்று அருப்புக்கோட்டை உட்கோட்ட டிஎஸ்பி., சகாயஜோஸ் தலைமையிலான போலீசார் மாஸ்க் அணிவதன் அவசியம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கொரோனா பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை கையெடுத்து கும்பிட்டு எடுத்துரைத்து வருகின்றனர். போலீசாரின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 22 April 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...