அருப்புகோட்டையில் இரு சக்கர வாகனம் திருட்டு கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு

அருப்புக்கோட்டையில் இரு சக்கர வாகனங்கள் திருடர்கள் திருடிய. சிசிடிவி காட்சிகள்
அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகனம் திருடுபோன சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு காமெரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். சம்பவத்தன்று இவர் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனை செய்ததில் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்ததும், அதில் ஒருவர் மட்டும் ராஜேசின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சிகளும் பதிவானது தெரியவந்தது. கண்காணிப்பு காமெரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu