/* */

கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் அடையாள நோட்டிஸ் - அமைச்சர்.

வருவாய்துறை துறை அமைச்சர் அருப்புக்கோட்டையில் சொன்னது.

HIGHLIGHTS

கொரோனோ பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் அடையாள நோட்டிஸ் - அமைச்சர்.
X

நாளை முதல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை கண்டறிந்து வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும் என வருவாய்துறை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்திய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை கண்டறிந்து வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டாலும் உயிர் போகும் அபாயம் இல்லை தடுப்பூசி செலுத்துவதை பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் தனியார் மருத்துவமனையில் கோரோனோ பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் கைவிடப்பட்டவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

அதனால் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும் மருத்துவர்களும் செவிலியர்களும் உயிரை பணயம் வைத்து பணி செய்வதாகவும் அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்.கொரோனோ வைரசால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்கள் உறவினர்கள் தொடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என தெரிவித்தார்

Updated On: 14 May 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  4. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்