/* */

கண்மாயில் இளைஞர் சடலம் போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி

HIGHLIGHTS

கண்மாயில் இளைஞர் சடலம் போலீசார் விசாரணை
X

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி கண்மாயில் இளைஞர் சடலமாக மீட்பு...கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்த பொன்னையா ராஜம்மாள் என்பவர் மகன் செல்வராஜ் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜவுளித் தொழில் செய்து வரும் செல்வராஜ் சென்ற ஊரடங்கின் போது சொந்த ஊருக்கு வந்த நிலையில் கொரோனா காரணமாக லிங்காபுரத்திலேயே தற்போது வரை இருந்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டை விட்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் செல்வராஜ் பந்தல்குடி கண்மாயில் சடலமாக கிடப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பந்தல்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் செல்வராஜின் சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த பந்தல்குடி போலீசார் யாரேனும் செல்வராஜை கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா இல்லை இறப்புக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனம் காணவில்லை என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 14 May 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!