/* */

பெருகிவரும் சைபர் குற்றம்: பொதுமக்களுக்கு எஸ்பி அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு எஸ் பி ஸ்ரீநாதா அறிவுரை வழங்கியுள்ளார்

HIGHLIGHTS

பெருகிவரும் சைபர் குற்றம்: பொதுமக்களுக்கு எஸ்பி அறிவுரை
X

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா

விழுப்புரம் மாவட்டத்தில் பெருகிவரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம் விழிப்புணர்வு வாரம் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின்பேரில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட சைபர்கிரைம் காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாரம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், இணையவழி மைய கடைகள், மகளிர் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் காவல்துறை அதிகாரிகளை கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள், தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும், இதற்காக சில வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செய்தி குறிப்பில் கூறியுள்ளார். அதன்படி,

  • அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  • ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி லிங்க், விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  • புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி உங்களுக்கு பரிசு விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அல்லது தபால்களை நம்பி ஏமாறாதீர்.
  • இணையதளத்தை பயன்படுத்தி வாகனம், இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
  • சமூகவலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது. உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பண உதவி செய்ய வேண்டாம்.
  • தேவையற்ற லிங்க், குறுந்தகவல், செல்போன் அழைப்பு போன்றவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.
  • இலவச வை-பை வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பண பரிவர்த்தனையை தவிர்க்கவும்.
  • மேலும் அறிமுகம் இல்லாத நபர்களின் வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.
  • சில நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய தங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி கேட்டால் தர வேண்டாம்.
  • உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் வாட்ஸ்-அப் மற்றும் சமூகவலைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருட்கள் அனுப்புவதாக கூறினால் நம்ப வேண்டாம்.
  • கூரியர் நிறுவனத்தில் இருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும், அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது https:cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். என கூறப்பட்டுள்ளது

Updated On: 8 Feb 2023 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...