Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேருக்கு பெருந்தொற்று பரவல்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 23 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை, 45,437 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், நேற்று ஒருவர் கூட இறப்பு இல்லை.
இதுவரை 354 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மட்டும் 14 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 44,843 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 240 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.