/* */

பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி  மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X

விதிமீறல் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

திண்டிவனம் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சாந்தகுமார் என்பவருக்கு கோட்டகுப்பம் பிரிவுக்கு விருப்ப மாறுதல் உத்திரவு வழங்கப்பட்டது. ஆனால், விழுப்புரம் மேற்பார்வை பொறியாளரால் நிர்வாக காரணம் என அப்பட்டமாக அரசியல் தலையீட்டிற்கு அடிபணிந்து அவரை கடலூர் மின் வட்டம் புதுப்பாளையம் பிரிவில் பணிபுரிய உத்திரவு அளிக்கப்பட்டது.

தலைமை பொறியாளரின் பணியமைப்பின் விதிமீறல் உத்திரவை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியுவை சேர்ந்த மூர்த்தி, முத்துக்குமரன், சேகர், புருஷோத்தமன், அருள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 11 Jan 2022 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  4. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  10. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...