விழுப்புரத்தில் பிரபல துணிக் கடையில் திருட்டு
விழுப்புரத்தில் பிரபல துணிக்கடையில் கொள்ளை நடந்தது. ( பைல் படம்)
By - P.Ponnusamy, Reporter |3 Sep 2021 6:15 PM GMT
விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக் கடையில் நேற்று இரவு திருட்டு நடைபெற்றது.
விழுப்புரம் காமராஜர் வீதியிலுள்ள பிரபலமான துணிக் கடையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மாடி வழியாக உள்ளே துளையிட்டு இறங்கி கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள தெருவில் திருட்டு நடந்து இருப்பது அப்பகுதி வியாபாரிகள் இடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu