விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பஸ் மோதி வாலிபர் உயிரிழப்பு
X
விழுப்புரம் காவல் நிலையம் (பைல் படம்)
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக நின்ற போது நகரப் பேருந்து மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

விழுப்புரம்-திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காக விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிலையத்துக்குள் வந்த அரசு டவுன் பஸ் முருகன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities