/* */

பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை: ஒருவர் கைது

வளவனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ப.வில்லியனூர் திரவுபதியம்மன் கோவில் தெருவில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

விசாரணையில் பிடிபட்ட அந்த நபர், ப.வில்லியனூர் எம்.ஜி. ஆர். காலனி முருகன் கோவில் தெருவை சேர்ந்த விஜயரங்கன் மகன் தினேஷ் (வயது 19) என்பதும், தப்பி ஓடியவர் அதே கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பதும், இவர்கள் இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தினேஷை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2,150 மற்றும் செல்போன், 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முருகையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 6 Sep 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்