/* */

விளிம்பு நிலை மக்களுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர்கிறதா? என ஆய்வு கூட்டம்

பழங்குடி, இருளர், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு அரசு திட்டம் சென்று சேர்கிறதா என்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

HIGHLIGHTS

விளிம்பு நிலை மக்களுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர்கிறதா? என ஆய்வு கூட்டம்
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது மற்றும் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவது குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் வியாழக்கிழமை (11.11.2021) நடைபெற்றது.

கூட்டத்தில் பழங்குடி, இருளர், நரிக்குறவர்கள் உள்ளிட்ட பல்வேறு விளிம்பு நிலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாக கிடைக்கவும், கிடைக்க பெற்றதை உறுதி செய்யவும் கலெக்டர் மோகன் கேட்டு கொண்டார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன். திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா. வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2021 12:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  4. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  5. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  6. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழில் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
  8. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  9. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  10. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?