/* */

தார் தொழிற்சாலையை தடை செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே தார் தொழிற்சாலையை தடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

தார் தொழிற்சாலையை தடை செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
X
தார் தொழிற்சாலையை தடை செய்ய கோரி மனு கொடுக்க வந்த விவசாயிகள்.

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் அருகே தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே பழம்பூண்டி, சங்கிலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட சங்கிலிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் தார் கலவை தயாரிக்க சிறிய எந்திரங்கள் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. அந்த எந்திரங்களை கொண்டு ஆண்டுக்கு அதிகபட்சம் 10 நாட்கள் மட்டும் தார் கொதிக்க வைத்து அதில் ஜல்லி கலந்து கொண்டு செல்லப்பட்டது. இதனால் கரும்புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதனை அப்போது நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பெரிய எந்திரங்கள் நிறுவப்பட்டு தார் கொதிக்க வைக்கப்பட்டதால் மீண்டும் கரும்புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலருக்கு புகார் மனு அனுப்பியதன்பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அந்த தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது அது உரிய அனுமதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டது.

அப்போது தொழிற்சாலை தொடர்ந்து இயங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை இயங்க எந்த பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தாமல் சட்டவிரோதமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்தும், அதற்கு அனுமதி வழங்கிய அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Updated On: 9 March 2023 11:35 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு