/* */

விழுப்புரம் அருகே சுடுகாட்டுப்பாதையை மறித்த இரும்பு கேட் அகற்றம்

விழுப்புரம் அருகே சுடுகாட்டு பாதையை மறித்து போடப்பட்ட தனிநபரின் இரும்பு கேட் வி.தொ.ச. போராட்டத்தால் அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே சுடுகாட்டுப்பாதையை மறித்த இரும்பு கேட் அகற்றம்
X

சுடுகாட்டு பாதை பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டம்,நாயனூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள மயானத்திற்கு செல்லும் பொதுப் பாதையை மறித்து, ஆக்கிரமித்து தனிநபர்கள் இரும்புக் கதவு போட்டு அடைத்து வைத்திருந்த சட்ட விரோத நடவடிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், விழுப்புரம் மாவட்ட குழுவும், கண்டாச்சிபுரம் வட்ட கமிட்டியும் கடந்த ஓராண்டாக தொடர் நடவடிக்கை மற்றும் போராட்டத்தை நடத்தி வந்தது.

செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி சம்மந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகியவை வழக்கம்போல ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, இரும்புக் கதவை அகற்றாமல் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 13-ஆம் தேதி,மாநில பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம் மற்றும் மாவட்ட ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டு இரும்புக் கதவை அகற்றும் நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் போராட்டத்தை அறிவித்திருந்தது.

போராட்டத்தை வலுவாக நடத்துவதற்கான அனைத்து தயாரிப்புகளும் நடந்து வந்த நிலையில், வி.தொ.ச. மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, வட்ட தலைவர் எம். சண்முகம், வட்ட செயலாளர் ராஜா ஆகியோருடன் சம்மந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், அதனை தொடர்ந்து அதன் அடிப்படையில் கடந்த 11.09.2022 ந்தேதி காலை சட்டவிரோத மயான பாதையை மறித்த இரும்புக் கதவை அகற்றினர். இது அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த முழு வெற்றியாகும்.

உறுதிமிக்க போராட்டத்தை நடத்திய அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்து உள்ளது.மேலும் இந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வெற்றிக்கு அந்த நாயனூர் கிராம மக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களும் பரவலாக நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Sep 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...